ஈஸ்வரி பிரச்சனைக்கு நடுவில் சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
ஜனனிக்கு இதுநாள் வரை குணசேகரன் மட்டுமே பிரச்சனையாக இருந்தார். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு செய்யக் கூடாத அநியாயம் எல்லாம் செய்துவிட்டார்.
ஒருகட்டத்தில் தனத மனைவியையே வீட்டில் வைத்து கொலை செய்ய துணிந்தார் குணசேகரன்.
தன்னை எதிர்த்த ஜீவானந்தத்தின் மனைவியை கொன்றது, மகளையே கடத்தி அநியாயம் செய்தது, மகனின் திருமண விஷயம், சொந்த தம்பியையே கடத்தி கொலை செய்ய பார்த்தது என ஏகப்பட்ட தவறுகள் செய்துவிட்டார்.

ஆனாலும் அவரின் தவறுகளுக்கு ஒரு தண்டனை கூட கிடைக்கவில்லை, நியாயமாக இருக்க நினைக்கும் ஜனனி போராட்டத்திற்கு தான் நிறைய தண்டனைகள் கிடைத்து வருகிறது.

புரொமோ
குணசேகரன் போடும் நாடகத்தை முழுவதும் நம்பி ஜனனியை எதிர்த்து வருகிறார் ஈஸ்வரி. நீதிமன்றத்திற்கு வந்த ஈஸ்வரி குணசேகரன் டீம் சொல்லிக் கொடுத்ததை அப்படியே கூறுகிறார்.

தற்போது குணசேகரன் வழக்கில் தேதி மாற்றம் நடந்துள்ளது, இதற்கு இடையில் வீட்டில் தர்ஷன்-பார்கவி திருமணம் கோலாகலமாக தொடங்கிவிட்டது.
இன்றைய எபிசோட் புரொமோவில், வீட்டிலேயே நடக்க இருக்கும் தர்ஷன்-பார்கவி திருமணத்திற்கு வர சொல்லி ஈஸ்வரி சக்திக்கு போன் செய்து அழைக்கிறார், ஆனால் ஜனனியை அழைக்கவில்லை.

காலையில் ஜனனி, சக்தியை திருமணத்திற்கு செல் என கூற அவர் உன்னை அழைக்காத இடத்திற்கு, உனக்கு மரியாதை இல்லாத இடத்திற்கு நான் கண்டிப்பாக செல்ல மாட்டேன் என கூற ஜனனி எமோஷ்னல் ஆகி அழுகிறார்.
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி News Lankasri