ஜனனி-சக்திக்கு எதிராக குணசேகரன் எடுத்த அதிர்ச்சி முடிவு, ஈஸ்வரி செய்யப்போவது?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஓடிக்கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது. குணசேகரன் தனது அம்மாவை அழித்தவர் அவரது குடும்பத்தை சிதைத்து அவரை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவர் தான் ராணா.

அவர் குணசேகரனை ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றுவது போல் நடித்து இப்போது அவரது வீட்டிற்குள் நுழைந்துவிட்டார். எல்லா பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என ராணா முழு நம்பிக்கை கொடுக்க குணசேகரனும் அவர் பக்கம் சாய்ந்துவிட்டார்.
குணசேகரனை தாண்டி ராணா மீது வேறு யாருக்கும் நம்பிக்கை இல்லை, முதலில் தர்ஷினி வரட்டும் என அமைதியாக இருக்கிறார்கள்.

எபிசோட்
இன்றைய எபிசோட் புரொமோவில், ஜனனி, தர்ஷினி இருக்கும் இடத்திற்கு போலீஸ் தேடி வந்துவிட்டனர். இன்னொரு பக்கம் வீட்டில் குணசேகரன், ஜனனி இனி இந்த வீட்டு மருமகள் கிடையாது, சக்தி என் தம்பி கிடையாது.

இரண்டு பேரின் உறவையும் ரத்து செய்யப்போகிறேன் என்கிறார், இதற்கு ஈஸ்வரி உன் முடிவு என்ன என கேட்கிறார். உடனே விசாலாட்சி ஜனனி குறித்து பேச குணசேகரன் அவரை மிரட்டுகிறார், இந்த விஷயத்தில் ஈஸ்வரி தான் கடைசி முடிவு எடுக்க வேண்டும் என கூறுகிறார்.

ஈஸ்வரி குணசேகரன் முடிவுக்கு ஆதரிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து காண்போம்.
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan