பரபரப்பான சூழல், ஜனனியிடம் தர்ஷினி சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த கதையில் இப்போது கதிரின் புதிய கடை திறப்பு விழாவிற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
கதிர் கடை திறப்பு விழாவிற்காக ஒருபக்கம் வேலை நடக்க இன்னொரு பக்கம் ராவணன் ஒரு பிளான் போட்டு வருகிறார். அன்று ஏதோ நடக்கப்போகிறது என்ற பயத்தில் ஜனனி இருக்கிறார்.

ஆனால் ராவணன் என்ன செய்யப்போகிறார், என்ன நடக்கப்போகிறது என்பதையெல்லாம் பொறுத்திருந்து காண்போம்.
அவர் விசாலாட்சியை நிகழ்ச்சிக்கு வர அழைத்தது எல்லாம் ஏதோ பிளான் என ரசிகர்களே யோசித்தார்கள், ஆனால் அவர் கடைசியில் வர மாட்டேன் என உறுதியாக கூறிவிட்டார்.

புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், ராவணனுக்கு Vk உயிரோடு இருக்கும் விஷயம் தெரிந்துவிட்டது. அவரை காண செல்லும் சக்தியை டிராக் செய்ய ராவணன் யாரிடமோ கூற அதை ஜனனி கேட்டுவிடுகிறார்.

இதனால் சக்தியை தனியாக விடக் கூடாது என ஜனனியும் அவர் இடத்தை தேடி செல்கிறார். இதற்கு இடையில் தர்ஷினி, ஜனனி-சக்தியை சந்தித்து ஏதோ பிரச்சனை வரப்போவதாக தெரிகிறது என கூற கவலைப்படாதே நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்.
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri