திடீரென ஈஸ்வரி வெளிப்படுத்திய ஆசை, செம ஷாக்கில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒரு பிரச்சனை முடிவதற்குள் அடுத்த பிரச்சனை என ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
குணசேகரன் மீது போடப்பட்டுள்ள வழக்கில் இருந்து தப்பிக்க இப்போது எல்லா விஷயத்தையும் மறந்த ஈஸ்வரியை பகடைகாயாக பயன்படுத்தி வருகிறார்.

ஈஸ்வரியும், குணசேகரன் மாறிவிட்டார், இப்போது நன்றாக தானே நடத்துகிறார், அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வோம் என ஈஸியாக எல்லோரிடமும் கூறுகிறார். கடைசியாக கடைசியாக அப்பத்தா வந்தார், ஆனால் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.
ஆனால் அறிவுக்கரசி குணசேகரன் வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்பட்ட எபிசோட் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.

புரொமோ
தற்போது இன்றைய எபிசோட் புரொமோவில், ஈஸ்வரி குணசேகரனிடம் தனக்கு ஒரு ஆசை என்கிறார். அதாவது தர்ஷன்-பார்கவிக்கு மீண்டும் திருமணம் செய்துவைக்க ஆசைப்படுவதாக கூறுகிறார்.

குணசேகரன் உடனே ஓகே கூற இதனை எல்லோரிடமும் கூறுகிறார். இதனைக் கேட்ட பார்கவி முதலில் ஷாக் ஆகிறார். ஜனனியும் ஈஸ்வரி சொன்னதை கேட்டு பார்கவிக்காக யோசிக்கிறார்.
பின் ஜனனி பொறுமையாக பார்கவியிடம் திருமணம் குறித்து கேட்கிறார், உன் மனதில் என்ன இருக்கிறது என கேட்கிறார்.