ஓட்டுபோடும் நாளன்று அஜித் ரசிகரின் போனை பிடுங்கியது பற்றி ஆரியிடம் கேட்ட நபர்- அவர் கொடுத்த பதில்
கடந்த ஏப்ரல் 6ம் தேதி தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒரு விஷயத்தை செய்தார்கள். ஓட்டுபோட்டு தங்களது ஜனநாயக கடமையை செய்து முடித்தார்கள்.
இப்போது ரிசல்ட் என்னவாக இருக்கும் என்பது தான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது, வரும் மே 2ம் தேதி அதற்கான பதில் கிடைத்துவிடும்.
ஓட்டுபோடும் நாளன்று அஜித் தனது மனைவியுடன் அதிகாலையிலேயே வந்துவிட்டார். அவர் ஓட்டுபோட வந்தபோது ரசிகர்கள் அவரை சூழ்ந்துவிட்டனர்.
மேலும் மாஸ்க், சமூக இடைவேளை என எதுவும் இல்லாமல் அவரை நெருங்கி ஒருவர் புகைப்படம் எடுக்க அஜித் கோபத்தில் அவரது போனை பிடுங்கிவிட்டார்.
இதனால் அங்கு கொஞ்சம் பதற்றமாக இருந்தது. பின் அஜித் அவர்களே மீண்டும் அந்த நபரிடம் இப்படி செய்யாதீர்கள், மாஸ்க் போடுங்கள் என்று கூறி போனை திருப்பி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஆரி, அஜித் அந்த ரசிகரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு செல்போனை திருப்பிக் கொடுத்த அந்த பண்பை நீங்கள் பார்க்கவேண்டும், பிரபலங்கள் வெளியில் வரும்போது ரசிகர்கள் அதிக அன்பினால் இதுபோன்று செய்து விடுகிறார்கள்.
அவ்வளவு கூட்டத்திற்கு நடுவே அந்த நபரை அழைத்து போனை கொடுத்ததையும் நீங்கள் பார்க்க வேண்டும் என்று ஆரி கூறியுள்ளார்.