ரூ. 72 கோடி மதிப்புள்ள சொத்தை பிரபல நடிகருக்கு கொடுத்துவிட்டு இறந்த ரசிகை.. அவரது முடிவு
ஒரு ரசிகை, தனது ரூ. 72 கோடி மதிப்புள்ள சொத்தை பிரபல நடிகருக்கு எழுதி வைத்துவிட்டு இறந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் சஞ்சய் தத். பாலிவுட்டை தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான லியோ படத்தில் தளபதிக்கு அப்பாவாக நடித்தார்.
ரசிகை
கடந்த 2018ம் ஆண்டு சஞ்சய் தத்துக்கு போன் வந்துள்ளது, அதில் போலீசார், உங்களின் தீவிர ரசிகையான நிஷா பாட்டில் இறந்துவிட்டார்.
அவர் தனது ரூ. 72 கோடி சொத்தை உங்கள் பெயரில் எழுதி வைத்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். போலீசார் சொன்னதை கேட்ட சஞ்சய் தத், அந்த சொத்துக்களை ஏற்க மறுத்துவிட்டார்.
இறந்தவர் யாரென்றே எனக்கு தெரியாது, அவரின் சொத்துக்கள் எனக்கு வேண்டாம் என போலீசாரிடம் கூறியிருக்கிறார் சஞ்சய் தத்.