நடிகர் அஜித்தை தேடி சென்ற ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி ! வருகை தந்த பிரபல நடிகை
கோவிலில் திரண்ட ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் தற்போது இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வந்தார்.
திடீரேன அஜித் ஐரோப்பிய நாட்டிற்கு சுற்றுலா சென்ற நிலையில் அங்கு எடுக்கப்பட்ட அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. மேலும் சமீபத்தில் தான் அவர் சென்னை திரும்பினார்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் அவரிடம் புகைப்படம் எடுக்க ஒருவர் அனுமதி கேட்டதும், அதற்கு அஜித் ஒத்துக்கொண்டதும் வீடியோவாக வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டது.
இந்நிலையில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அஜித் சாமி தரிசனம் செய்ய வருவதாக நேற்று இரவு தகவல் பரவியுள்ளது. இதனால் அஜித்தை காண்பதற்கு அவரின் ரசிகர்கள் கோவிலுக்கு பின்புற வாசலில் காத்திருந்துள்ளனர்.
பெருமளவு ரசிகர்கள் கூட்டம் அங்கு திரண்டதால் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று பாகுகாப்பு பணியில் தீவிரம் காட்டியுள்ளனர். இரவு 9 மணிவரை அஜித் கோவிலுக்கு வரவில்லை. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால் அந்த நேரத்தில் பிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் சமயபுர கோவில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்துள்ளார்.