எஸ்.பி.பிக்கு பிடித்த நபர் மரணம்! 2000 பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியர் இறப்பு! சோகத்தில் திரையுலகம்!
கடந்த 2020 சினிமாவை முக்கால் வருடமாக முடக்கிப்போட்டது. பெரும் நஷ்டத்தையும் தந்துள்ளது. அதே வேளையில் அத்துறை சார்ந்த பலரும் மரணம் எய்தினர். இந்த வருடம் முதலே பல்வேறு சினிமா துறை சார்ந்த பிரமுகர்கள் இறக்கும் செய்திகள் அடுத்தடுத்து காதுகளை எட்டுகின்றன.
அடுத்தாக பிரபல பாடலாசிரியரும், வசன கர்த்தாவுமான ராஜேந்திர பிரசாத் கடந்த செவ்வாய் கிழமை அன்று மாரடைப்பால் காலமாகியுள்ளார்.
தெலுங்கு சினிமாவை சேர்ந்த இவர் 2000 பாடல்களையும், 300 படங்களுக்கு வசனங்களும் எழுதியுள்ளார். மறைந்த பாடகர் எஸ்.பி.பி கூட இவரை பாடல்களை எழுதச்சொல்லி உற்சாகமூட்டியுள்ளாராம்.
கமல் ஹாசன் நடித்த பஞ்சதந்திரம், தசாவதாரம் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்ட போது இவரே இப்படங்களுக்கும் வசனம் எழுதினாராம்.