ஜானகி முதல் சின்மயி வரை, தமிழ் சினிமாவின் சிறந்த பாடகிகள்.. சிறப்பு பார்வை
தமிழ் திரையுலகில் இதுவரை வெளிவந்த பல திரைப்படங்கள் கதையையும் தாண்டி, பாடலுக்காகவும் படங்கள் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. அதிலும் பின்னணி பெண் பாடகிகள் பாடிய பல பாடல்கள் நம் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ளது. அப்படி நம் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ள சிறந்த பின்னணி பெண் பாடகிகள் யார்யார் என்பதை பார்க்கலாம் வாங்க..
ஜானகி
1957ஆம் ஆண்டு வெளிவந்த 'விதியின் விளையாட்டு' எனும் படத்தில் இடம்பெற்ற 'பெண்ணின் ஆசை பாழானது ஏனோ' என்ற பாடலே இவரது முதல் பாடல் ஆகும். இவர் பாடிய அணைத்து மொழிகளிலும் சுமார் 48 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஜானகி அவர்கள் பாடியதில் ' காதல் கடிதம் தீட்டவே, வெட்டி வேறு வாசம், சின்ன சின்ன வண்ண குயில், ஏ குருவி சீட்டு குருவி, மலரே மௌனமா ' உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ளது.
சித்ரா
தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக மலருடைய மனதை கொள்ளைகொண்டவர் சித்ரா. இனிமையான பாடல்களுக்கும் இவர் சொந்தக்காரர் என்று கூட சொல்லலாம். அதற்காகவே இவருக்கு சின்னக்குயில் சித்ரா என்று பெயர் தந்துள்ளனர். நீதானா அந்தக் குயில் படத்துல வரும் பூஜைக்கேத்த பூவிது எனும் பாடலை பாடி பின்னணி பாடகியாக அறிமுகம் ஆகியுள்ளார்.
இதன்பின் இவர் குரலில் வெளிவந்த " ஒவ்வொரு பூக்களுமே, நின்னுக்கோரி வர்ணம், தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே, ஆளபோல் வேலபோல், மின்னல் ஒரு கோடி, அஞ்சலி அஞ்சலி, இதோ இதோ என் பல்லவி " என பல பாடல்களை இன்று கேட்டால் கூட மனம் நிம்மதி அடைகிறது.
அனுராதா ஸ்ரீராம்
இந்திரா திரைப்படத்தில் இனி அச்சம் அச்சம் இல்லை என்ற பாடலை பாடி தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் அனுராதா ஸ்ரீராம். அதன்பின் மின்சார கனவு திரைப்படத்தில் அன்பென்ற மழையிலே பாடல், ஜீன்ஸ் திரைப்படத்தில் அன்பே அன்பே பாடல் உள்ளிட்ட பல்வேறு பாடல்களை பாடி பிரபலமானார்.
இவருடைய குரலில் வெளிவந்த " ஒரு பொண்ணு ஓன்னுநான் பாத்தேன், கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு, இலந்தைப்பழம் இலந்தைப்பழம், நலம் நலமறிய ஆவல், ஒரு நாள் ஒரு கனவு, மீனமா " உள்ளிட்ட பல பாடல்கள் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கிறது.
ஸ்ரேயா கோஷல்
ரொமான்டிக் பாடல்கள் என்றால் உடனடியாக அனைவர்க்கும் நியாபகம் வருவது ஸ்ரேயா கோஷல் தான். 90ஸ் கிட்ஸ் துவங்கி, இன்று வரை காதலிக்கும் அனைவரின் மொபைல்களில் ரிங்க்டோனாக இவர் பாடிய பல பாடல்கள் இருக்கிறது. பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான இவர், முதன் முதலில் ஆல்பம் எனும் படத்தில் இடம்பெற்ற செல்லம் செல்லம் பாடலை பாடி தமிழில் அறிமுகமானார்.
இதன்பின் இவர் பாடிய " நன்னாரே நன்னாரே, முன்பே வா அன்பே வா, கண்டாங்கி கண்டாங்கி, பூக்களே சற்று ஓய்வு எடுங்கள், நீதானே நீதானே, மன்னிப்பாயா, கண்ண காட்டு போதும், காதல் அணுக்கள், ஒண்ண விட்டா யாரும் எனக்கில்ல " உள்ளிட்ட பல பாடல்கள் காதல் கீதங்களாக ஒளிந்துகொண்டு இருக்கிறது.
சின்மயி
கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை பாடி தமிழில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. இவர் பாடிய 'காதலே காதலே, வாராயோ வாராயோ, என்தாரா என்தாரா, சரசரசர சராகாத்து, எனதுயிரே " போன்ற பல பாடல்கள் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
தென்னிந்தியாவில் ஏன் இவ்வளவு மோசமாக படம் எடுக்கிறார்கள்- RRR படம் குறித்து கமல் மோசமான டுவிட்