விஜய் சொன்ன வார்த்தை.. சாகும் வரை அவரை மறக்க மாட்டேன்: ஸ்டண்ட் நடிகர் கிருஷ்ணா
சினிமாவில் ஹீரோக்கள் தான் பேரும் புகழும் பெறுகிறார்கள், ஆனால் அவர்கள் ஹீரோயிசத்தை காட்டுவதற்காக அவர்களிடம் அடிவாங்கும் ஸ்டண்ட் கலைஞர்கள் பெறும் புகழ் மிக மிக குறைவு தான்.
Fighter கிருஷ்ணா
அப்படி பல படங்களில் ஸ்டண்ட் கலைஞராக அதிக படங்களில் நடித்து இருக்கும் கிருஷ்ணா, அதற்கு பிறகு காமெடி ரோல்களில் நடித்து தான் பாப்புலர் ஆனார்.
கலகலப்பு படத்தில் சந்தனத்துடன் இருக்கும் ரோலில் நடித்து அதிகம் பிரபலம் ஆனார். திமிங்கலம் என சந்தானம் தான் அவருக்கு பெயர் வைத்தாராம். பருத்திமூட்டை காமெடி தற்போதும் பேசப்படும் ஒன்று என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
அதற்கு பிறகு அவர் விஜய் உடன் தெறி உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
விஜய்யை சாகும் வரை மறக்க மாட்டேன்
தற்போது நடிகர் கிருஷ்ணா சினிஉலகத்திற்கு அளித்து இருக்கும் பேட்டியில் விஜய்யை சாகும் வரை மறக்கமாட்டேன் என தெரிவித்து இருக்கிறார்.
"பைட்டர்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை என சொன்ன ஒரே ஆள் விஜய் தான். அவரை சாகும் வரை நாங்கள் எல்லோரும் மறக்க மாட்டோம்” என அவர் கூறி இருக்கிறார்.
முழு பேட்டி இதோ
பிக்பாஸ் 6வது சீசனில் சர்ச்சைக்கு பெயர் போன இந்த சீரியல் நடிகையா?- TRP எகிருமா?