பிரபல நடிகை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து- என்ன ஆனது?
ஜாக்குலின்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகரர் சுகேஷ் சந்திரசேகரிடம் பரிசுப்பொருட்கள் வாங்கியதாக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் ஜாக்குலின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக அமலாக்கத்துறை மற்றும் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் அடிக்கடி ஆஜராகி வருகிறார். இதனால் அவரை படங்களில் அவ்வளவாக காணப்படவில்லை.
தீ பிடித்த வீடு
ஜாக்குலின் பெர்னாண்டஸ் மும்பையின் பளி ஹில் பகுதியில் உள்ள 17 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 15வது தளத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ஜாக்குலின் வசித்துவரும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது, 14வது தளத்தில் தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது.
விஷயம் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து எரிந்த தீயை சுமார் 1 மணிநேரம் போராடி அணைத்தனர். இதில் நடிகை வசிக்கும் தளத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.