பம்பாய் படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது அரவிந்த் சாமி கிடையாதாம்.. வேறு யார் தெரியுமா
மணி ரத்னத்தின் பம்பாய்
மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று பம்பாய்.
அரவிந்த் சாமி மற்றும் மனிஷா கொய்ராலா இணைந்து இப்படத்தில் நடித்திருந்தார்கள்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் இன்றும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்
இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது, அரவிந்த் சாமி கிடையாதாம்.
ஆம், முதன் முதலில் இப்படத்தில் ஹீரோவாக மணி ரத்தனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகர் விக்ரம் தானாம்.

ஆனால், அப்போது அவர் வேறுஒரு படத்தில் வைத்திருந்த கெட்டப் காரணமாக இப்படத்தில் நடிக்கமுடியாமல் போனதாம்.
இதனால், மணி ரத்னம் விக்ரமுக்கு பதில் அரவிந்த் சாமியை ஹீரோவாக தேர்ந்தெடுத்துள்ளார்.