நடிகை ஜெனிலியாவின் இரு மகன்களா இது.. அடையாளம் தெரியாதா அளவிற்கு வளர்ந்துவிட்டார்களே
சங்கர் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான படம் பாய்ஸ். இப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா.
இப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான இவர், அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியளவில் பல்வேறு மொழிகளில் நடிக்க துவங்கினார்.
தமிழில் விஜய்யுடன் சச்சின் மற்றும் வேலாயுதம், ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம், தனுஷுடன் உத்தமபுத்திரன் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கும்.
பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை ஜெனிலியா, திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகியிருக்கிறார்.
இந்நிலையில் இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு தாய்யாகியுள்ள நடிகை ஜெனிலியா, தன்னுடைய இரு மகன்களுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை ஜெனிலியாவின் மகன்களா இவர்கள், நன்றாக வளர்ந்துவிட்டார்களே.. என்று கூறி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..