எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா?
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் அடுத்து என்ன நடக்கும், இவர் என்ன திட்டம் வைத்துள்ளார் என ரசிகர்களை யோசிக்க வைக்கும் வகையில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
சொத்துக்களை தனது தம்பிகளுக்கு எழுதி வைத்த குணசேகரன் இப்போது வீட்டிலேயே முடங்கிவிட்டார், ஆனாலும் ஏதாவது ஒரு பிளானை போட்டு தம்பிகளை வைத்து அதை செய்ய வைக்கிறார்.

இன்னொரு பக்கம், கொடைக்கானலுக்கு சென்ற ஜனனிக்கு தேவசகாயம் மூலம் பிரச்சனை வந்தது, ஆனால் சக்தி எப்படியோ தேவசகாயத்திடம் சிக்காமல் ஜனனியை காப்பாற்றிவிட்டார். பதற்றத்தில் காரிலேயே மயங்கிய ஜனனியை சக்தி பத்திரமாக மருத்துவமனையில் சேர்க்க குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர் கூறியுள்ளார்.

குட் நியூஸ்
எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்க முதல் பாகத்தின் சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.
அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலின் முதல் பாகம் கன்னடத்தில் ரீமேக் ஆக உள்ளதாம். அந்த தொடருக்கு Bhagyavantharu என பெயரிடப்பட்டுள்ளது.
You May Like This Video