கதறி அழுத ஜனனி.. சக்தியை கொன்று விடுவேன் என மிரட்டும் குணசேகரன்! எதிர்நீச்சல் சீரியலில் இன்று நடக்கப்போவது இதுதான்
திரைப்படங்களுக்கு நிகரான பரபரப்பான திரைக்கதையில் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல்.
கதறி அழுத ஜனனி
ஆதிகுணசேகரன் பற்றி யாருக்கும் தெரியாத உண்மையை தெரிந்துகொள்ள இராமேஸ்வரம் சென்றார் சக்தி. தனுஷ்கோடியில் சக்தி தேடி சென்ற உண்மை அவருக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மதுரைக்கு திரும்பிய சக்தியை யாரோ திடீரென தூக்கி சென்றனர்.

இதன்பின், அவரை அடித்து தலைகீழாக கட்டி தொங்கவிட்டுள்ளனர். அந்த வீடியோவை ஜனனிக்கு அனுப்பியுள்ளனர். வீடியோ பார்த்த ஜனனி மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோக, குணசேகரன்தான் இதை செய்துள்ளார் என கதறி அழுகிறார் ஜனனி. ஆனால், இதை நான் செய்யவில்லை என கூறுகிறார். ஒரு கட்டத்தில் சக்தியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக குணசேகரன் காலில் விழுந்து கூட கேட்கிறார் ஜனனி.

மிரட்டும் குணசேகரன்
இந்த நிலையில், ஜனனியை தனியாக அழைத்து சென்று இதை செய்தது நான்தான். ராமசாமி மெய்யப்பா மூலமாக இதை செய்ததாக கூறுகிறார். ராமசாமி மெய்யப்பா மற்றும் ஜனனிக்கு இடையே முன் பகை இருப்பதால், அதனை குணசேகரன் தற்போது பயன்படுத்தி கொள்கிறார்.

அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் ஜனனியிடம் எனக்கு எதிராக நீ செயல்பட்டால் சக்தியை கொலை செய்ய சொல்லிவிடுவேன் என மிரட்டுகிறார். இதுதான் இன்று எதிர்நீச்சல் சீரியலில் நடக்கப்போவது.