10 வருடம் கழித்து ஜி.வி.பிரகாஷ் செய்யும் விஷயம்! என்ன தெரியுமா
ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பல திறமைகள் கொண்டவர். அவர் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.
அவர் கடந்த 2013ல் மதயானை கூட்டம் என்ற படத்தை தயாரித்து இருந்தார். அந்த படத்தில் ஓவியா மற்றும் கதிர் நடித்து இருந்தனர். அப்போது அந்த படம் 15 கோடி வசூலித்ததாம். ஆனால் அதற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் பட தயாரிப்பு பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை.
மீண்டும் தயாரிப்பு
இந்நிலையில் பத்து வருடங்கள் கழித்து தற்போது ஜி.வி.பிரகாஷ் மீண்டும் தயாரிப்பில் இறங்கி இருக்கிறார். அவர் நடிக்கும் 25வது படத்தை தான் ஜி.வி சொந்தமாக தயாரிக்க போகிறார்.
அந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறதாம். படத்தின் ஹீரோயின் யார் உள்ளிட்ட மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி News Lankasri
