ஜி.வி.பிரகாஷ் செய்த விஷயம் - ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டுக்கள்
தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் இசையமைப்பாளராகவும் வளம் வருபவர் ஜி.வி.பிரகாஷ்.
இவர் நடிப்பில் தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
அதுமட்மின்றி சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் 43வது படம் ஆகியவற்றிற்கு ஜி.வி தான், இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவரின் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட இணையவாசி ஒருவர்,
இவரது வாசிப்பையும், இருக்கும் நிலைமையையும் பாருங்கள் என குறிப்பிட்டிருந்தார்.
இதை கண்ட ஜி.வி.பிரகாஷ், ' இந்த நபரை கண்டுபிடிக்க முடிந்தால், நாம் அவரை பாடல் பதிவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வாசிப்பு குறிப்புகள் மிக திறமையாகவும், துல்லியமாகவும் இருக்கின்றன ' என குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..