அன்பே அன்பே கொள்ளாதே.. இலவச அனுமதியுடன் யாழில் ஹரிஹரன் நடத்தும், பிரமாண்ட இசை நிகழ்ச்சி..
பாடகர் ஹரிஹரன்
இந்திய திரையுலகில் திறமையான பாடகர்களில் ஒருவர் ஹரிஹரன். இவர் பாடகர் மட்டுமின்றி இசையமைப்பாளரும் ஆவார்.
மேலும் இவருடைய குரலில் வெளிவந்த அன்பே அன்பே கொள்ளாதே, அவள் வருவாளா, என்னை தாலாட்ட வருவாளா, மின்னல் ஒரு கோடி என பல சூப்பர்ஹிட் பாடல்களை நாம் கேட்டு மகிழ்ந்து இருக்கிறோம்.
ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி
இந்த இசை நிகழ்ச்சி வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி யாழ்ப்பாணம் முத்தவெளி அரங்கில் நடைபெறுகிறது. இது முற்றிலும் ரசிகர்களுக்கு இலவசமாக நடத்தப்பட்டும் நிகழ்ச்சியாகும். இதற்கான டிக்கெட்ஸ், இனி வரும் நாட்களில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குழு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும், Magic group யாழ் வருகையை பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு, இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சியை ஹரிஹரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri

பாகிஸ்தானுக்கு அடுத்த நெருக்கடி... இந்த நாட்டின் முடிவால் இந்தியாவுடன் கைகோர்க்கும் சீனா News Lankasri
