இது போன்று இருந்தால் தான் படத்தில் நடிப்பேன்..ஹரிஷ் கல்யாண் போட்ட கண்டிஷன்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தாமாமா, பொறியாளன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் ஹரிஷ் கல்யாணுக்கு இப்படங்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை.
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார். இதன் மூலம் ஹரிஷ் கல்யாண் 'பியார் பிரேமா காதல்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இதையடுத்து வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே போன்ற படங்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். தற்போது கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கும் 'லெட்ஸ் கெட் மேரீட்' என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார்.

கண்டிஷன்
பிரபல நடிகராக வளர்ந்து வரும் ஹரிஷ் கல்யாண், அவரிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களுக்கு புதிய கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார்.
அது என்னவென்றால் அவரிடம் கதை சொல்லும் இயக்குனர்கள் குறைந்த பட்சம் இரண்டு படங்களையாவது இயக்கி இருக்க வேண்டுமாம். இவரின் இந்த செயலை பார்த்து ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர்.

விஜய்யை விட்டு பிரிந்து சென்றுவிட்டாரா சங்கீதா.. இப்போது எங்கு இருக்கிறார் தெரியுமா, இதோ