இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் மனைவி மற்றும் மகள்களை பார்த்துளீர்களா? வெளியான சமீபத்திய புகைப்படம்
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக பல வருடங்களாக திகழ்ந்து வந்தவர், இவர் அனைத்து முன்னணி நடிகர்களின் படத்தையும் இயக்கியிருந்தார்.
அந்த வகையில் ரஜினியின் படையப்பா, கமலின் பஞ்சதந்திரம், அஜித்தின் வரலாறு, விஜயின் மின்சாரக்கண்ணா உள்ளிட்ட டாப் நடிகர்களின் முக்கிய படங்களை இயக்கியிருந்தார்.
மேலும் கடைசியாக தமிழில் ரஜினியின் லிங்கா படத்தை இயக்கியிருந்தார்,அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் கே.எஸ்.ரவிக்குமார் மற்ற மொழிபடங்களை இயக்கி வந்தார்.
அதுமட்டுமின்றி கே.எஸ்.ரவிக்குமார் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருவதை பார்த்து வருகிறோம். இவர் நடிப்பில் கோமாளி, நான் சிரித்தால், அயோக்யா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் அவரின் மனைவி மற்றும் மகள்களுடன் சட்டமன்ற தேர்தலில் வாக்கை செலுத்திவிட்டு, அப்போது அவர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
