ஒரு நாளைக்கு ரூ. 14 லட்சம் வரை சம்பளம் வாங்கிய பிரபல சீரியல் நடிகை.. எந்த தொடருக்காக?
சீரியல் நடிகை
தொலைக்காட்சிக்கு மவுசு கூட அதில் வரும் பிரபலங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது.
எந்த ஒரு தனியார் நிகழ்ச்சி, கடை திறப்பு விழா என எதுவாக இருந்தாலும் சின்னத்திரை பிரபலங்கள் தான் அதிகம் உள்ளனர்.
தமிழகத்தை தாண்டி வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் வெள்ளித்திரை பிரபலங்களை விட சின்னத்திரை பிரபலங்கள் தான் அழைக்கப்படுகிறார்கள். மக்களின் கவனம் சின்னத்திரை பக்கம் பெரிய அளவில் உள்ளது.
சம்பளம்
தற்போது சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்கும் போது பிரபல நடிகை ஒரு நாளைக்கு ரூ. 14 லட்சம் வரை சம்பளம் வாங்கிய விவரம் வெளியாகியுள்ளது.
அவர் வேறுயாரும் இல்லை இப்போது அரசியலில் மாஸ் காட்டிவரும் வரும் ஸ்மிருதி இரானி தான்.
நடிகை, அரசியல்வாதி, ஃபேஷன் மாடல், தொலைக்காட்சி தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் முதன்முறையாக கியூங்கி சாஸ் பி கபி பஹுதி என்ற தொலைக்காட்சி தொடரில் துளசி இரானி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் நீண்ட காலம் ஓடிய தொடர்களில் இதுவும் ஒன்று. ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு ரூ.8,000 சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.
தொடர் மக்களிடம் மிகவும் பிரபலமாக பின்னர் ஒரு நாளைக்கு ரூ.50,000 வரை சம்பளம் பெற்றாராம்.
அதன் பின்னர் ‘கியூங்கி சாஸ் பி கபி பஹூதி’ தொடரின் புதிய சீசனில் நடிப்பதற்காக அவர் ஒரு நாளைக்கு ரூ.14 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் இந்திய சின்னத்திரை நடிகைகளின் அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்ற பெருமையை பெருகிறார் ஸ்மிருதி இரானி.

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
