போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா?
ஸ்ரீகாந்த்
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய இளம் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த்.
பார்த்திபன் கனவு, கனா கண்டேன், பூ, ஏப்ரல் மாதத்தில், ரோஜா கூட்டம், விஜய்யுடன் நண்பன் என இவர் நடித்த படங்கள் சில நல்ல ஹிட், தமிழை தாண்டி தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார்.
தண்டனை
கடந்த சில தினங்களுக்கு முன் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் கொக்கைன் பயன்படுத்தியது தெரிய வர கைது செய்யப்பட்டார்.
போலீசார் விசாரணையில் ஸ்ரீகாந்த் தான் போதைப் பொருள் பயன்படுத்திய விஷயத்தையும் எப்படி பழக்கம் வந்தது என்றும் கூறியுள்ளார். இதில் இன்னொரு நடிகருக்கும் போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அவர் தலைமறைவாகியுள்ளதால் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள், அவர் வேறு யாரும் இல்லை நடிகர் கிருஷ்ணா தான்.
போதைப் பொருள் விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
பொதுவாக போதைப்பொருள் வழக்கில் கைதானால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்று நிலையில் நடிகர் ஸ்ரீகாந்திற்கும் 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
