காசு வாங்காமல் இளையராஜா செய்த விஷயம்.. இசைஞானி இளையராஜாவின் மறுபக்கம்
இசைஞானி இளையராஜா
இளையராஜா என்ற பெயருக்கு அறிமுகம் தேவையில்லை. இசையின் கடவுளாக ரசிகர்களால் பார்க்கப்படும் இவர் 80-களில் இருந்து இன்று வரை இசைஞானி இளையராஜா உச்சத்தில் இருக்கிறார்.

1500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இசை துறையில் ஜாம்பவானாக விளங்கி இளையராஜா 50 ஆண்டுகளை கடந்திருந்தாலும், இன்றும் இவருடைய பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையவில்லை என்பதே உண்மை.

இளையராஜா குறித்து சர்ச்சைகளும், ட்ரோல்களும் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், தன்னால் முடிந்த உதவிகளை அவர் பல இயக்குநர்களுக்கு செய்திருக்கிறார். அதில் ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இளையராஜாவின் மறுபக்கம்
அப்போதைய காலகட்டத்தில் புதிதாக அறிமுகமாகும் இயக்குநர்களின் படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் ஹிட் என்ற சென்டிமென்ட் இயக்குநர்கள் மத்தியில் இருந்து வந்தது.

அப்போது அறிமுக இயக்குநர்களாக தாங்கள் இயக்கிய படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்று தன்னிடம் வந்த பி.வாசு, பிரதாப் போத்தன், மணிவண்ணன், சங்கிலி முருகன் போன்றவர்களிடம் ஒரு பைசா கூட காசு வாங்காமல், அவர்களின் முதல் படத்திற்கு இலவசமாக இசையமைத்து கொடுத்தாராம் இளையராஜா. இந்த தகவல் தற்போது இணையத்தில் உலா வருகிறது.