காரில் செல்லும் போது ஊரே இளையராஜா பாட்டு கேட்க அவர் யாருடைய பாட்டு கேட்பார் தெரியுமா?
இளையராஜா
இளையராஜா தமிழ் சினிமாவின் ஏன் தமிழ் சினிமா ரசிகர்களின் உயிர் மூச்சாக இருக்கிறார்.
இவரது பாடல்கள் கேட்டு வாழ்க்கையில் மக்கள் வெற்றிப்பெற்ற கதைகள் பல உள்ளது. கிட்டத்தட்ட 50 வருடங்களாக 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து மக்களால் இசைஞானியாகவும் மேஸ்ட்ரோவாகவும் கொண்டாடப்படுகிறார்.
இளையராஜாவும் சினிமாவில் நுழைந்த உடனே சாதித்துவிடவில்லை, அவரது வாழ்க்கையிலும் பல அவமானங்கள், புறக்கணிப்புகள் இருந்துள்ளது.
தற்போது அவரது சினிமா பயணத்தை வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படும் என்ற செய்தி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.
மெர்குரி நிறுவனம் படத்தை தயாரிக்க இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்க கமல்ஹாசன் திரைக்கதை எழுதுகிறார்.
தெரியாத தகவல்
இளையராஜா என்றாலே இசை, அவரது இசையை கொண்டாடாத மக்களே இல்லை.
காரில் பயணமா உடனே அவரது பாடல்கள் தான், அதிலும் இரவு நேர பயணம் என்றாலே அவரது இசை. இப்படி தமிழ்நாடே அவரது பாடலுக்கு அடிமையாகி இருக்க அவரோ காரில் பயணம் செல்லும் போது எந்த பாடலும் கேட்க மாட்டாராம்.
இந்த தகவலை மனசெல்லாம் பட இயக்குனர் சந்தோன் சமீபத்தில் ஷேர் செய்துள்ளார்.