ஜீ தமிழ் முக்கிய சீரியலில் பிரபல நடிகையின் கதாபாத்திரத்தின் முடிவு வருகிறது.. வருத்தத்தில் ரசிகர்கள்
ஜீ தமிழ்
கார்த்திகை தீபம், அயலி, வீரா, கெட்டிமேளம், பாரிஜாதம் என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் கடந்த 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இதுவரை ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் வீரா.

வீரா சீரியல்
இந்த சீரியலில் மாறன், வீரா ஆகிய இருவருடைய கதாபாத்திரம்தான் முதன்மையாக உள்ளது. இவர்களை தாண்டி கண்மணி என்கிற கதாபாத்திரம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்த கதாபாத்திரத்தில் சின்னத்திரை நடிகை சுபிக்ஷா நடித்து வருகிறார்.

இந்த நிலையில், வீரா சீரியலில் இருந்து சுபிக்ஷா நடித்து வரும் கண்மணி கதாபாத்திரம் திடீரென முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏன், இந்த கதாபாத்திரத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர் என்பது குறித்து காரணம் தெரியவில்லை.

ஆனால், சுபிக்ஷா நடித்து வரும் கண்மணி கதாபாத்திரம் முடிவுக்கு வந்துள்ளது என்கிற தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர். இவருக்காகதான் இந்த சீரியலேயே நான் பார்க்கிறேன் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.