ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தாக்குதலை நேற்று தொடங்கிய நிலையில், பதிலுக்கு ஈரான் அரபு நாடுகளின் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது.
துபாயின் புகழ்பெற்ற கட்டிடங்கள் தாக்குதலால் சேதம் அடைந்து பற்றி எரியும் வீடியோக்களும் வெளியாகி இருக்கின்றன.
மேலும் உலகிலேயே எப்போதும் பிசியாக இருக்கும் துபாய் விமான நிலையம் மூடப்பட்டு இருக்கிறது. விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

சிக்கித் தவிக்கும் இந்திய நடிகைகள்
இந்நிலையில் துபாய்க்கு சென்ற இந்திய நடிகைகள் அங்கே சிக்கி தவிப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். தங்களை காப்பாற்றும்படி பிரதமர் மோடிக்கு உருக்கமாக வேண்டுகோள் வைத்து இருக்கின்றனர்.
நடிகை சோனல் சவுஹான் தான் இந்தியாவுக்கு திரும்பி வர வழி இல்லாமல் தவிப்பதாக கூறியுள்ளார்.
Hon’ble PM @narendramodi ji,
— SONAL CHAUHAN (@sonalchauhan7) February 28, 2026
I am currently stranded in Dubai due to the ongoing crisis, with flights cancelled and no clear way to return to India. I respectfully seek the Government’s guidance for a safe journey home
Grateful for any support extended🙏🏻🇮🇳@MEAIndia @IndiainDubai
நடிகை ரிச்சா பனாய் போட்டிருக்கும் பதிவில் தான் துபாயில் சிக்கி தவிப்பதாகவும், இந்த நேரத்தில் உதவ முடியாது என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறி உள்ளார். தன்னை காப்பாற்றும்படி பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதி இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri