திடீரென கொண்டாட்டத்தில் இறங்கிய இரு மலர்கள் சீரியல் நடிகர்கள்... என்ன விஷயம் புகைப்படம் இதோ
இரு மலர்கள்
இரு தோழிகளின் வாழ்க்கை கதையாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது இரு மலர்கள் சீரியல்.
ஹிமா பிந்து மற்றும் ஜீவிதா ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்த தொடருக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்துள்ளது. சந்தோஷ் நாயகனாக நடிக்க இரு நாயகிகளை மையப்படுத்திய கதையாக தொடர் உள்ளது.

நண்பர்களான ஹிமா பிந்து, ஜீவிதா மற்றும் நாயகனான சந்தோஷ் இருவர்களுக்கிடையே நடக்கும் நிகழ்வுகளை பிரதானப்படுத்தி இரு மலர்கள் தொடர் எடுக்கப்படுகிறது. நண்பர்கள், காதல், குடும்பம் என எல்லாம் கலந்த கலவையாக சீரியலின் கதைக்களம் அமைந்துள்ளது.
தற்போது இரு மலர்கள் சீரியல் குழுவினர் திடீரென கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அது என்ன காரணம் என்றால் தொடர் ஆரம்பிக்கப்பட்டு 200 எபிசோடுகளை எட்டிவிட்டதாம். இதனால் சீரியல் குழுவினர் அனைவரும் இருக்க கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதோ அந்த போட்டோ,