2 வருடங்களாக நடிகை பானுப்ரியா அனுபவிக்கும் வேதனை- கண்ணீருடன் பேட்டியில் கூறிய பிரபலம்
நடிகை பானுப்ரியா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பானுப்ரியா. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மற்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.
நடனத்திலும் சிறந்து காணப்பட்ட நடிகை பானுப்ரியா இப்போதெல்லாம் அவ்வளவாக படங்கள் நடிப்பதில்லை.
1998ம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு அபிநயா என்ற மகளும் உள்ளார்.

நோயால் பாதிக்கப்பட்ட பிரபலம்
சமீபத்தில் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பானுப்ரியா, எனது கணவர் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்த பின்னர் எனக்கு நினைவாற்றல் மிகவும் குறைந்துவிட்டது.
எதையும் நியாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை, மனமும் வெறுமையாகிவிட்டது. படப்பிடிப்புகளில் வசனங்கள் மறந்துபோன சம்பவங்களும் நடந்துள்ளன என கண்ணீர்விட்டு பேசியுள்ளார்.
அதேபோல் கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக வந்த தகவல்களும் உண்மையில்லை, எனது கணவர் இல்லாததால் அதைப்பற்றி இப்போது பேச விரும்பவில்லை என கூறியுள்ளார்.
தற்போது தனது மகள் லண்டனில் பட்டப்படிப்பு படித்து வருவதாகவும் பானுப்ரியா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

விவாகரத்து பெற்று தனியாக வாழும் நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவர் யார் தெரியுமா?- அவரும் நடிகரா?
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 14.2 ஓவரிலேயே..157 ரன் இலக்கினை எட்டி ஷதாப் கான் அணி அபார வெற்றி News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு IBC Tamilnadu