ரஜினி முருகன் படத்தில் நாயகியாக முதலில் நடிக்க இருந்தது கீர்த்தி சுரேஷ் இல்லையா?
நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் படிப்படியாக வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்து இப்போது முன்னணி இளம் நடிகராக வலம் வருகிறார்.
அவர் நடிக்கும் படங்கள் பல செம ஹிட் லிஸ்டில் உள்ளது. அப்படி அவர் நடித்து செம ஹிட்டான படங்களில் ஒன்று ரஜினி முருகன்.
பொன்ராம் இயக்கிய இப்படத்தில் காமேடி, சென்டிமென்ட் என எல்லாம் கலந்த கலவையாக இருக்கும்.
கதையை தாண்டி சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் ஜோடி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது. ஆனால் என்ன விஷயம் என்றால் இப்படத்தில் நாயகியாக நடிக்க வைக்க படக்குழு நிறைய நாயகிகளிடம் பேசியுள்ளது.
அவர்கள் யார் யார் என்றால் நஸ்ரியா, தமன்னா, சமந்தா, லட்சுமி மேன்ன் ஆகியோரை நடிக்க கேட்டுள்ளனர். அவர்கள் சில காரணங்களால் படத்தில் நடிக்க மறுக்க கடைசியாக அந்த வாய்ப்பு கீர்த்தி சுரேஷிடம் வந்துள்ளது.