சினிமா குறித்து நடிகை த்ரிஷா எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு... பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்
நடிகை த்ரிஷா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை த்ரிஷா.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளிலும் நடித்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக தனது பயணத்தை தொடங்கியவர் இப்போதும் கதாநாயகியாக வலம் வருகிறார்.
அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் அவரைப் பற்றி நிறைய ஷாக்கிங் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

பிரபலம் தகவல்
பிரபலங்கள் நிறைய பேர் யூடியூப் பக்கம் திறந்து நிறைய பேட்டிகள் எடுத்து வருகின்றனர். அப்படி நடிகரும், இயக்குனருமான சித்ரா லட்சுமணன் சமீபத்தில் தனது யூடியூப் பக்கத்தில் ஒரு விஷயம் பகிர்ந்துள்ளார்.

நடிகை த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுவதாக வெளியான தகவல்கள் உண்மைதான்.

நானும் இது தொடர்பாக சில தயாரிப்பாளர்களிடம் பேசினேன், த்ரிஷா படங்களில் கமிட் ஆவதை முழுவதுமாக கைவிட்டுவிட்டார் என்று கூறியுள்ளார். கடந்த 24 ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி நாயகியாக வலம்வரும் த்ரிஷா எடுத்த இந்த முடிவு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.