இந்தியாவில் மட்டுமே இப்படி நடக்குது, தமிழ்நாட்டில் கேட்காமலேயே.. பிக் பாஸ் ராஜு எதை சொல்கிறார் பாருங்க
விஜய் டிவியில் சீரியல்களில் நடித்து பிரபலம் ஆகி அதன் பின் பிக் பாஸ் சென்று மேலும் புகழின் உச்சிக்கே சென்றவர் ராஜு ஜெயமோகன். அவர் பிக் பாஸ் டைட்டில் ஜெயித்தபிறகு ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார்.
அவர் ஹீரோவாக நடித்த பண் பட்டர் ஜாம் படம் சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மட்டும்..
இந்நிலையில் நடிகர் ராஜு உலகத்திலேயே இந்தியாவில் மட்டும் தான் ஒரு விஷயம் நடப்பதாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
காசு வாங்காம தண்ணி தருவது பற்றி தான் ராஜு பேசி இருக்கிறார். தமிழ்நாட்டுலே கேக்காமலேயே தண்ணி தரங்க எனவும் அவர் கூறி இருக்கிறார்.
ராஜு பதிவில் உள் அர்த்தம் வேறு ஏதாவது இருக்கிறதா என நெட்டிசன்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ராஜுவுக்கு யாரோ தண்ணி காமிச்சுட்டாங்க
— வீரமணி விஸ்வநாதன் (@veeramaniv) November 2, 2025