வருமான வரித்துறையினர் சோதனையில் கணக்கில் வராத ரூ. 200 கோடி கண்டுபிடிப்பு.. அதிர்ச்சியளிக்கும் தகவல்
வருமான வரித்துறையினர் சோதனை
கடந்த நான்கு நாட்களாக தமிழ் திரையுலகின் ஃபைனான்சியர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

பிரபல ஃபைனான்சியர் அனுப்புச்செழியன், தயாரிப்பாளர்கள் எஸ். தாணு, ஞானவேல்ராஜா, எஸ்.ஆர். பிரபு உள்ளிட்ட பல பிரபலங்களின் அலுவலகத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
ரூ. 200 கோடி கண்டுபிடிப்பு
இந்நிலையில், 40 இடங்களில் நடைபெற்று வந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ. 200 கோடி பணமும், ரூ. 3 கோடி மதிப்பிலான நகையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் ரூ. 26 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் இந்த சோதனையில் அடுத்தடுத்த என்னென்ன அதிர்ச்சி தகவல் வெளியாகும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? IBC Tamilnadu