இது தேர்தல், சினிமா ஷுட்டிங் இல்லை.. கொந்தளித்த நடிகை சிம்ரன்
இன்று தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் ஆளாக நடிகர் அஜித் 7 மணிக்கு முன்பே வந்து தனது வாக்கை செலுத்தி இருந்தார்.
மேலும் அடுத்தடுத்து சினிமா நட்சத்திரங்கள் எல்லோரும் வாக்களித்து வருகின்றனர். அது மீடியாவில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.
சினிமா நட்சத்திரங்களை போட்டோ எடுக்கவும் வீடியோ எடுக்கவும் பெரிய அளவில் கூட்டம் வாக்குச்சாவடிகளில் கூடி வருகிறது.

சிம்ரன்
இந்நிலையில் நடிகை சிம்ரன் இது பற்றி கோபமாக X தளத்தில் பதிவிட்டுள்ளார். 'இது தேர்தலில் வாக்களிக்கும் இடம், சினிமா ஷூட்டிங் அல்ல. டிராமா எதுவும் இல்லாமல் எதார்த்தத்தில் மட்டும் கவனம் செலுத்துங்க."
"ஓட்டு போடுவது உரிமை மட்டுமல்ல என் கடமை" என சிம்ரன் கூறியுள்ளார்.
Let’s focus on the reality avoid the drama, it’s a voting booth not a cinema shoot. We all are one while we vote. Voting is not just my right it’s my responsibility. pic.twitter.com/jTIKKfStOa
— Simran (@SimranbaggaOffc) April 23, 2026