என்னுடைய அம்மா மறைவுக்கு பின் நடந்த விஷயங்கள்.. எமோஷனலாக பேசிய ஜான்வி கபூர்!!
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் தடம் பதித்தவர் தான் ஜான்வி கபூர். இவர் பாலிவுட் பட இயக்குனர் கரண் ஜோஹரின் தடக் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதனை அடுத்து இவர் நடித்த குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள் திரைப்படம் கடந்த 2020-ஆம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற மே 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஜான்வி கபூர், "வெள்ளிக்கிழமை முடி வெட்டக்கூடாது, கருப்பு உடை அணியக்கூடாது என்பது போன்ற சில நம்பிக்கைகளை எல்லாமே நான் பின்பற்றியது கிடையாது.
என்னுடைய அம்மா உயிருடன் இருக்கும் வரை இந்த நடைமுறைகளை நாங்கள் அனைவரும் பின்பற்றினோம். அம்மாவின் மறைவுக்கு பிறகு தான் எனக்கு அந்த நம்பிக்கை வர தொடங்கியது. என் அம்மாவின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கு கோவிலுக்கு செல்ல முடிவு செய்தேன். அதை பின்பற்றி வருகிறேன் என்று ஜான்வி கபூர் எமோஷனலாக பேசியுள்லார்.
பற்களை பிடுங்கி, வன்கொடுமை: அமீரக சிறையில் கொடூர சித்திரவதையை அனுபவிக்கும் பிரித்தானியர் News Lankasri
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri