ஸ்ரீதேவி மரணத்திற்கு பிறகு ஜான்வி கபூர் எடுத்த முடிவு.. என்ன பாருங்க
தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் படங்கள் நடித்து லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. அவர் 2018ல் துபாயில் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் அந்த நேரத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
விசாரனைக்கு பிறகு அவரது மரணம் விபத்து தான் என துபாய் போலீசார் அறிவித்தனர். ஸ்ரீதேவி இறந்தபோது ஜான்வி கபூரின் முதல் படம் கூட ரிலீஸ் ஆகவில்லை.

ஆன்மிகம்
அம்மா ஸ்ரீதேவி மரணத்திற்கு பிறகு ஜான்விக்கு ஆன்மீகத்தின் மீது அதிகம் நாட்டம் ஏற்பட்டதாம். அம்மாவை அதிகம் நம்பினேன். அது நம்பிக்கை அல்லது ஆன்மிகம் எப்படி வேண்டும் என்றாலும் சொல்லலாம்.
ஒவ்வொரு பிறந்தநாளுக்கு திருப்பதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். நாராயணா, நாராயணா என அவரது மந்திரத்தை அதிகம் உச்சரிக்கிறேன் என ஜான்வி கபூர் கூறி இருக்கிறார்.
