ஜெயம் ரவியை தொடர்ந்து பொன்னியின் செல்வனில் தனது ஷூட்டிங்கை முடித்த பிரபல நடிகர்..
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் வரலாற்று திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி என ஏராளமான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
பொன்னியின் செல்வன் PS 1 மற்றும் PS 2 என இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது, மேலும் PS 1 படத்தின் புதிய பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகியிருந்தது.
இதனிடையே இப்படத்தின் தனது பாகத்தின் ஷூட்டிங்கை ஒட்டுமொத்தமாக முடித்துள்ளதாக நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
மேலும் தற்போது பிரபல நடிகர் ரகுமான் பொன்னியின் செல்வன் படத்தில் தனது பகுதியை முடித்துள்ளதாக அறிவித்துள்ளார். இதோ அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட ஒரு சில புகைப்படங்கள்.
Finally it’s a wrap up for my part from the epic #ponnin selvan the movie. Great experience and learnt a lot from this journey of making this movie with director @ManiRatnamFC , now waiting to watch it on the big screen ! pic.twitter.com/0lR7IcQNws
— Rahman (@actorrahman) September 4, 2021