ஜெயம் ரவியின் இரண்டாம் மகனா இது? குடும்பத்துடம் எடுத்த புகைப்படம்
ஜெயம் ரவி
பல வித்தியாசமான கதைகளில் நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகர் ஜெயம் ரவி. கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது.
இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெயம் ரவி. இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.
ஜெயம் ரவி 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயான் என இரு மகன்கள் உள்ளனர். இவரின் மூத்த மகன் ஆரவ் 'டிக் டிக் டிக்' படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் பிரபலமானார்.

பொங்கல் வாழ்த்து
இந்நிலையில் ஜெயம் ரவி, பொங்கல் திருநாளை தனது குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். அங்கு எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் "அன்பு பொங்க ஆசை பொங்க இன்பம் பொங்க இனிமை பொங்க எப்போதும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கல் வாழ்த்துக்கள்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 'இரண்டாம் மகன் அயான் பெரிய ஆளாக வளர்ந்துவிட்டார்' என்று ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் மகனா இது! வேஷ்டி சட்டையில் எப்படி இருக்கிறார் பாருங்க