தனது மகனின் புகைப்படத்தை முதன்முறையாக ஷேர் செய்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிபர்- கியூட்டான புகைப்படம்
பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வாரம் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேசி இருந்தார்கள்.
தமிழகத்தில் நிறைய பள்ளி மாணவிகளின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொள்வது மக்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
அரசும் இந்த விஷயத்திற்காக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசித்து வருகிறார்கள்.
சீரியல் கதையிலும் ஆசிரியர்களால் பாலியல் தொல்லை ஏற்பட்டால் பயப்படாமல் போராட வேண்டும், அதற்கு பதில் தற்கொலை செய்துகொள்வது எல்லாம் சரியான முடிவு இல்லை என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த தொடரில் ஆரம்பத்தில் ராதிகா என்ற வேடத்தில் நடித்தவர் ஜெனிபர். இரண்டாவது முறையாக கர்ப்பமானதால் சீரியலில் இருந்து வெளியேறினார். சமீபத்தில் தான் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
தற்போது தனது குழந்தைக்கு முத்தம் கொடுத்தபடி அவர் ஒரு கியூட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.