யூ-டியூப் சேனல்கள் மீது வழக்கு.. சமந்தாவிற்கு நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு
நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் கடந்த மாதம் விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தனர்.
இந்த விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டதும், தன்னை பற்றி சில யூ-டியூப் சேனல்கள் அவதூறான தகவல்களை பரப்பியதாக கூறி நடிகை சமந்தா, ஐதராபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. இதனை விசாரித்த நீதிபதி, நடிகை சமந்தாவின் சொந்த வாழ்க்கை குறித்து எதையும் சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பு செய்யக்கூட என்று உத்தரவிட்டார்.
மேலும், ஏற்கனவே சில யூ-டியூப் சேனல்களில் சமந்தாவின் சொந்த வாழ்க்கை குறித்து வந்துள்ள அணைத்து செய்திகளும், நீக்கிவிட வேண்டும் என்று கூறினார்.
யூ-டியூப் சேனல்கள் மட்டுமின்றி இனி, சமந்தாவும் தனது சொந்த வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யக்கூடாது என்று நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.