சில வருடங்களுக்கு பிறகு சந்தித்துள்ள காற்றுக்கென்ன வேலி சீரியல் ஜோடி... வைரலாகும் போட்டோஸ்
காற்றுக்கென்ன வேலி
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2021ம் ஆண்டு புதுமுக நடிகர்கள் நடிக்க ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டமாக தொடங்கப்பட்ட சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி.
வெண்ணிலா, படிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர், ஆனால் அவரது அப்பா திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார். திருமணத்தில் இருந்து வெண்ணிலா தனது பள்ளி ஆசிரியரின் உதவியால் சென்னைக்கு வருகிறார்.

படிக்க வந்தவருக்கு கல்லூரியில் ஏகப்பட்ட பிரச்சனை நடக்கிறது, காதலும் வருகிறது, அதனால் நிறைய பிரச்சனைகள், சவால்களை சந்திக்கிறார். அதையெல்லாம் தாண்டி சாதிக்கும் வெண்ணிலா என்பவரின் கதையாக ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி சீரியல் கடந்த 2023ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

லேட்டஸ்ட்
இந்த சீரியலில் வெண்ணிலாவாக பிரியங்கா என்ற நடிகையும், சூர்யாவாக முதலில் தர்ஷன் என்பவர் நடிக்க அவருக்கு பிறகு பாதியில் சுவாமிநாதன் நடிக்க வந்தார்.

பிரியங்கா-சுவாமிநாதன் ஜோடிக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்தது. சீரியல் முடிந்த கையோடு அவரவர் வெவ்வேறு வேலைகளில் பிஸியாக இப்போது சுவாமிநாதன் மற்றும் பிரியங்கா சில வருடங்களுக்கு பிறகு ஒன்றாக சந்தித்துள்ளனர்.
அந்த புகைப்படங்களையும் அவர்கள் தங்களது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர். இதோ போட்டோ,