இளையராஜாவால் விஜய் சேதுபதியின் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் ! அதிர்ச்சியளிக்கும் தகவல்..
தமிழ் சினிமாவில் சிறந்த திரைப்படங்களை இயக்கி தனது படங்களின் மேல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளவர் தான் இயக்குனர் மணிகண்டன்.
காக்காமுட்டை படத்தை இயக்கியதன் மூலம் தேசிய விருதை வென்ற மணிகண்டன், அடுத்தடுத்து அவர் இயக்கிய குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரியளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் அவர் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் தான் கடைசி விவசாயி, இப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முதலில் இப்படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார். ஆனால் அவர் இப்படத்தில் இருந்து விலக அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
இதனிடையே தற்போது தனக்கு தெரிவிக்காமலேயே கடைசி விவசாயி படத்தில் இருந்து பின்னணி இசையை நீக்கிவிட்டு வேறு ஒருவரை வைத்து இசை அமைத்துள்ளார் என இயக்குனர் மணிகண்டன் மீது இசையமைப்பாளர் சங்கத்தில் இளையராஜா புகார் அளித்துள்ளார்.
இந்த செய்தி வெளியாகி தற்போது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.