கணவரின் ஆயுள் நீடிக்க நடிகை காஜல் அகர்வால் செய்த விஷயம்.. புகைப்படங்கள் இதோ
காஜல் அகர்வால் - கவுதம்
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு எனும் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நீல் எனும் ஒரு மகன் இருக்கிறார்.
கணவரின் நீண்ட ஆயுள்
இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் இணைந்து கர்வா சௌத் என்கிற பண்டிகையை கொண்டாடியுள்ளார். கணவரின் நீண்ட ஆயுள் மற்றும் நல்வாழ்வுக்காக பெண்கள் விரதத்தை மேற்கொள்வது இந்த கர்வா சௌத் பண்டிகை ஆகும் என கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால், தொடர்ந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கர்வா சௌத் பண்டிகையை கொண்டாடிய அழகிய தருணங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காஜல். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..













