கேரவனில் அத்துமீறி நுழைந்த நபர்.. அதிர்ச்சியடைந்த நடிகை காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்
இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் திருமணத்திற்கு பின் முன்பு போல் தொடர்ந்து படங்களில் நடிக்காமல், சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அடுத்ததாக இவர் நடிப்பில் ராமாயணா திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் இராவணனின் மனைவி மண்டோதரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதை தவிர்த்து, பாலகிருஷ்ணாவின் 111-வைத்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சி சம்பவம்
இந்த நிலையில், படப்பிடிப்பின் போது உதவி இயக்குநர் ஒருவர் அனுமதி இல்லாமல் தனது கேரவனில் அத்துமீறி நுழைந்து, மார்பில் தன் பெயரை பச்சை குத்தப்பட்டிருப்பதை காட்டியதாக நடிகை காஜல் அகர்வால் அதிர்ச்சிகரமான தகவலை பகிர்ந்துள்ளார்.

உதவி இயக்குநரின் இந்த எல்லை மீறிய செயலால் தான் கடும் அதிர்ச்சியடைந்ததாகவும், இதுபோன்ற முறையற்ற நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாது என எச்சரித்து அனுப்பியதாகவும் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.