2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
காந்தாரா சாப்டர் 1
கன்னடத்தில் 2022ஆம் ஆண்டு வெளிவந்து உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி நடித்திருந்தார்.
காந்தாரா படத்தின் வெற்றியை தொடர்ந்து காந்தாரா சாப்டர் 1 படம் இந்த ஆண்டு வெளிவந்தது. பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தில் ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். உலகளவில் இப்படம் ரூ. 855 கோடி வசூல் செய்து, 2025ஆம் ஆண்டு இந்திய சினிமாவில் வெளிவந்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.
தமிழக வசூல்
இந்த நிலையில், தமிழ்நாட்டில் காந்தாரா சாப்டர் 1 செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 74 கோடி வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் இப்படத்தின் இறுதி வசூல் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri