கர்ணன் படத்தில் இருக்கும் தவறான விஷயம் - சுட்டிக்காட்டிய நடிகர் உதயநிதி
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 9ஆம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன். வெளியாகி இன்று வரை வசூலில் வெற்றிநடை போட்டு வருகிறது.
அதோடு திரையுலக பிரபலங்களும் பலரும் இப்படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் கர்ணன் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியதோடு, படத்தில் இருக்கும் ஒரு தவறையும் சுட்டிகாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பது, " கர்ணன் பார்த்தேன், ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன் ".
மேலும் " 1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கர்ணன் படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்த தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம் என எனக்கு உறுதியளித்தனர். நன்றி " என்று பதிவு செய்திருக்கிறார் உதயநிதி.
1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி.
— Udhay (@Udhaystalin) April 13, 2021