தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்பாகிறது தனுஷின் கர்ணன்- எப்போது தெரியுமா?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் OTTயில் வெளியான திரைப்படம் கர்ணன்.
கதை மற்றும் வசூல் ரீதியாக படம் அமோக வரவேற்பை பெற்றது. தென் மாவட்டங்களில் நிலவும் சாதிய பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியிருந்தது.
OTTயில் மட்டும் இதுவரை ஒளிபரப்பான இப்படம் விரைவில் தொலைக்காட்சியில் வர இருக்கிறது. இந்த படத்தின் சேட்லைட் உரிமையை ஜி தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியது.
கர்ணன் படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது என ஜி தமிழ் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்ணன் படம் ஒளிபரப்பாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வாள் தூக்கி வருகிறான்... கர்ணன்...#zeetamil #karnan #dhanush #MariSelvaraj @dhanushkraja @mari_selvaraj pic.twitter.com/P0EBbiiHiX
— Zee Tamil (@ZeeTamil) July 18, 2021