மீண்டும் சென்சேஷன் இயக்குனருடன் இணையும் கார்த்தி.. அடுத்த அதிரடி ஆரம்பம்
தமிழ் திரையுலகில் பல சிறந்த படங்களை கொடுத்த முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி.
இவர் நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
ஆனால் தற்போது இவர், மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் தான் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை முடிவித்துவிட்டு, நடிகர் கார்த்தி சென்சேஷன் இயக்குனரான முத்தையாவின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
இதன்பின், மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் படப்பிடிப்பில் இணைந்துகொள்வார் என்று தகவல் கூறுகின்றனர்.
இயக்குனர் முத்தையாவின் கூட்டணியில் இதற்கு முன் கொம்பன் திரைப்படத்தில் கார்த்தி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.