உற்சாகத்துடன் இன்று டப்பிங் பணியை துவங்கிய நடிகர் கார்த்திக்.. சந்தோஷத்தில் ரசிகர்கள்
பிரசாந்த் நாயகனாக நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, பிரியா ஆனந்த், யோகிபாபு, சமுத்திரகனி, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருடன் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற கார்த்திக், குணமடைந்ததும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு தனது காட்சிகளை விரைவாக முடித்துக்கொடுத்துள்ளார்.
அத்துடன், உற்சாகத்துடன் நேற்று டப்பிங் பணியையும் தொடங்கினார். டப்பிங் ஸ்டுடியோவில் தியாகராஜன் மற்றும் பிரசாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சந்தோசம் ஆகியுள்ளார். இதோ பாருங்க..
