கருப்பு வேஷத்தில் ராஜராஜன்.. சந்திரகலாவுக்கு தெரிய வந்த உண்மை - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சி எழுத்துக்கள் முதல் சனி வர இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடு டாக்டர் வைத்து ராஜராஜனுக்கு உடம்பு சரியில்லை என பொய் சொல்ல வைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ராஜராஜன் குழுவில் ரெஸ்ட் எடுப்பது போல செட்டப் செய்து மயில்வாகனத்தை படுக்க வைத்து பின் பக்கமாக அங்கிருந்து எஸ்கேப் ஆக கார்த்திக் அவரை கோவிலுக்கு அழைத்து செல்கிறான்.

பிறகு கோவிலில் கருப்பு வேஷமிடும் ராஜராஜன் நான்கு எல்லைகளில் விளக்கு போட்டு கருப்புசாமியாக அருள்வாக்கு கொடுக்கிறார். இதைப் பார்த்த சிவனாண்டி அடியாள் ஒருவன் அவருக்கு போன் செய்து ராஜராஜன் கருப்பு பேசிவிட்டு ஆடும் விஷயத்தை சொல்கிறான்.

உடனே அவன் சந்திரகலாவுக்கு தகவல் தெரிவிக்க சந்திர கலா அப்படி இருக்க வாய்ப்பில்லையே என்று சொல்லி இராஜராஜன் ரூமுக்கு செல்ல இங்கே ரோகினி வயிறு வலிக்கிறது என சத்தம் போட மேலே சென்றவர்கள் அப்படியே திரும்பி கீழே வந்து விடுகின்றனர்.

கோவிலில் ராஜராஜன் திட்டமிட்டபடி கருப்பு வேஷம் விட்டு சடங்குகளை செய்து கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.