சந்திரகலாவுக்கு அதிரடி சவால் விட்ட ரேவதி.. ஊரையே கூட்டி முக்கிய முடிவு எடுத்த கார்த்திக் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில் சந்திரகலாவின் திட்டம் தோல்வியில் முடிந்த நிலையில், இன்று கதைக்களம் மேலும் பரபரப்பாக நகரவுள்ளது.
ரேவதி வீட்டிற்கு வர, அங்கு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக கூடியிருக்கின்றனர். அப்போது மயில்வாகனம், "என்ன ரேவதி, பயணம் நல்லா போச்சா?" என்று கேட்க, ரேவதி சந்தோஷமாக "ரொம்ப ஜாலியா போச்சு" என்று பதிலளிக்கிறாள். இதைக் கேட்டு வெளியே அமைதியாக இருந்தாலும் மனதிற்குள் கொதிக்கும் சந்திரகலா, தனது திட்டம் பலிக்காத ஏமாற்றத்தில் தவிக்கிறாள்.

இதையடுத்து ரேவதியை நேரடியாக எதிர்கொள்ளும் சந்திரகலா, "நீ கார்த்திக்கோட தான் போனேன்னு என் கண்ணால பார்த்தேன்" என்று கூறுகிறாள். ஆனால் சற்றும் பதற்றமடையாத ரேவதி, "உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சா? சரி... உங்களால என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சு பாருங்க!" என்று தைரியமாக சவால் விடுகிறாள். ரேவதியின் இந்த பதில் சந்திரகலாவை அதிர்ச்சியடையச் செய்கிறது.
மறுபக்கம், கார்த்திக் ஊர் மக்களை ஒன்று சேர்த்து முக்கியமான பஞ்சாயத்தை கூட்டுகிறார். ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு நகைகள் சாத்தி சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்று யோசனை தெரிவிக்கிறார். ஆனால் கார்த்திக்கின் முடிவுக்கு சிவனாண்டி கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதால் அங்கு பரபரப்பு உருவாகிறது.

உடனே கார்த்திக், "யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் சொல்லுங்கள்" என்று கேட்க, ஊர் மக்கள் அனைவரும் "நீங்க சொல்றது சரிதான்" என்று அவருக்கு முழு ஆதரவு அளிக்கின்றனர். இதனால் அம்மன் பூஜைக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக தொடங்குகின்றன.
ரேவதியின் சவாலுக்கு சந்திரகலா என்ன பதிலடி கொடுக்கப் போகிறாள்? சிவனாண்டியின் எதிர்ப்புக்கு பின்னால் என்ன காரணம்? கார்த்திக் எடுத்த இந்த முடிவு அடுத்ததாக என்ன பிரச்சனையை உருவாக்கப் போகிறது?
பரபரப்பும், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த இந்த எபிசோடை இன்று இரவு 9 மணிக்கு உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்!